Tuesday 7th of May 2024 01:22:26 PM GMT

LANGUAGE - TAMIL
காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் தொடர்பில் வவுனியாவில் நூல் வெளியீடு!

காணாமல் ஆக்கப்பட்ட சிறார்கள் தொடர்பில் வவுனியாவில் நூல் வெளியீடு!


இறுதிப்போரின் போது குடும்பத்தினருடன் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் சிலரது விபரங்கள் அடங்கிய நூல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் சிறுவர்கள் தினத்தினை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது இறுதிப்போர்க் காலத்தில் வட்டுவாகல், ஓமந்தை மற்றும் பல்வேறு இடங்களிலும் தமது தாய் தந்தையருடன் இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வரும்போது பெற்றோர் சரணடையும்போது அவர்களுடன் இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர்கள் காணாமல் போயிருந்தனர்.

இந் நிலையில் அச் சிறுவர்கள் சிலரது தகவல்கள் அடங்கிய நூல் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந் நூலினை வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தலைவி எஸ். சரோஜினி வெயிட்டு வைக்க பாடசாலை மாணவனொருவன் பெற்றுக்கொண்டார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE